Wednesday, October 24, 2012

சிகிரிய சிங்க பாதத்தின் ஒரு பகுதியில் பிளவு: பதற்றத்தில் சிங்கள மக்கள்!!


சிகிரிய சிங்க பாதத்தின் ஒரு பகுதியில் பிளவு: பதற்றத்தில் சிங்கள மக்கள்

இலங்கையில் ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கத்தால் ஏற்பட்ட அதிர்வில் சிகிரிய சிங்க பாதத்தின் பகுதியொன்று உடைந்து பிளவுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதி பழமை வாய்ந்ததும், இலங்கையின் சுற்றுலாத் தலமுமான சிகிரியாவில் அமைந்துள்ள சிங்க பாதத்தின் ஒரு பகுதி இன்று நிலவிய கடும் இயற்கை காலநிலையால் பிளவுற்றதை அடுத்து சிங்கள மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.
கடந்த பல காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையில்கூட ஏற்படாத இப் பிளவினால் தொடர்ந்து ஏதாவது அழிவுகள் நாட்டில் ஏற்பட்டுவிடுமோ என சிங்கள கிராமவாசிகள் மனதில் பதற்றம் தென்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், யாழில் பெய்து வரும் பருவகால மழையின் காரணமாக புல்லுக்குளத்தின் அணைக்கட்டும் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்லுக்குளத்தின் அணைக்கட்டுக்கு அருகில் இருந்த மின்கம்பமும் குளத்தினுள் சரிந்து தொங்கிய வண்ணம் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அண்மையில் புல்லுக்குளம் ஆழப்படுத்தப்பட்டபோது அணைக்கட்டு அத்திவாரத்திற்கு கீழ் தோண்டப்பட்டமையால் மழை நீரால் சுமார் 50 அடி நீளமான அணை மண் அரிப்புக்கு உள்ளாகி குளத்தினுள் சரிந்து வீழ்ந்துள்ளது.
அத்துடன் தொடர்ந்து பெயதுவரும் மழையினால் குளத்தினுள் நீர் நிரம்பும் போது ஏனைய அணைக்கட்டுக்களும் இடிந்து விழும் அபாயநிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
சில நாட்களுக்கு நாட்டில் இயற்கை காலநிலை சீரற்றதாக இருக்குமென வானிலை காலநிலை அவதானிப்பகம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment