Monday, August 6, 2012

கட்டுநாயக்கவில் வைத்து கடத்தப்பட்டதாக தெரிவித்த இளம்பெண் காதலனுடனேயே ஓட்டம்!



கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சுன்னாகத்தைச் சேர்ந்த இளம்பெண் தனது காதலனுடன் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் தனது காதலனை தொலைபேசி மூலம் அழைத்து அவருடன் வாகனத்தில் ஏறிச் சென்று மன்னாரில் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம், சூராவத்தையைச் சேர்ந்த மேற்படி பெண் தனது கணவனுடன் நேற்று முன்நாள் சனிக்கிழமை இரவு சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து தாங்கள் சட்டபூர்வமாக பதிவுத் திருமணம் செய்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த இளைஞனைத் திருமணம் செய்வதற்கு இரு வீட்டாரும் ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருந்தனர். ஆனால் பெண் பிரான்ஸிலிருந்து நாடு திரும்பிய பின்னர் அந்த இளைஞனைத் திருமணம் செய்ய வேண்டாமென்று பெண்ணின் தாயார் மறுப்புத் தெரிவித்திருந்தார்.
பெண்ணை மீண்டும் பிரான்ஸிற்கு அனுப்ப கொழும்புக்கு அழைத்துச் சென்றார். இந்த நிலையிலேயே இருவரும் ஓடிச் சென்று திருமணம் செய்துகொண்டதாகவும் உறவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment