Sunday, July 8, 2012

பெண்களுக்கு உச்ச கட்டத்தை வர வைக்க என்ன செய்யலாம்?


கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன.
தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்பட்டு விட்டால் அவளே கலவித்தொழில் செய்வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப்படியென்றால் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அதன்பின் அவளுடன் சேராமல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவதால் இப்படி நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவசரப்பட்டால் அதனால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியானதும் பெண்ணுக்கும் அதே சமயம் பூர்த்தியானதாக ஆண் நினைப்பது தவறாகும். கலவியில் இருவருடைய இன்பத்தையும் திருப்தியையும் கவனிப்பது மிக முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது. பெண்ணுடைய திருப்தி அவசியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.
பெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டத்தை அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. 
ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடுதல் அல்லது கசக்குதல், முத்தமிடுதல், நகக்குறி பதித்தல், பற்குறி பதித்தல், தட்டுதல் அல்லது தடவுதல், மாற்றுப்புணர்ச்சி, வாய் சேர்க்கை போன்ற புறத்தொழில்களை முதலில் செய்து அதன் பின்னர் கலவியில் ஈடுபடுவதன் மூலம் ஒரு பெண்ணை உச்ச கட்டத்தை அடையச் செய்யலாம். ஆண் தன் விரல்களால் பெண்ணின் அல்குலைத் தேய்த்து விடுவதால் அவளின் இச்சை அதிகரிக்கும். அதைச் சுற்றி சுற்றித் தேய்த்து உணர்வூட்ட வேண்டும். பிறகு ஒரு விரலை மட்டும் யோனிக்குள் நுழைத்துப் பார்க்கவேண்டும். உள்ளே தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அதன் பின் லிங்கத்தை உள்ளே செலுத்தலாம்.
யோனியின் தன்மையை ஆண் சோதித்துத் தெரிந்து கொள்வது இன்பம் பெருகுவதற்கு உதவியாக இருக்கும். பெண்ணின் யோனியின் ஸ்பரிசத் தன்மையை நான்கு விதமாகச் சொல்லலாம்.
1.தாமரை இதழ் போன்று மென்மையானது
2.முண்டும் முடிச்சுமானது
3.மடிப்புகளாக தளர்ச்சியடைந்திருப்பது
4.பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பானது.

யோனியானது தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அத்தகைய பெண்கள் விரைவாக காம உணர்ச்சி கிளர்ந்து எழுந்து உச்ச கட்டத்தை அடைந்து விடுவார்கள். கலவிக்கு அவர்களை தயார்படுத்துவது மிகவும் எளிது. எனவே அத்தகைய யோனியை தேய்த்து விட வேண்டிய அவசியமில்லை. மற்ற மூன்று வகையான யோனி உடையவர்களுக்கு லிங்கம் அதிகமாக உள்ளே நுழைந்து உராய்ந்தால்தான் காம இச்சை உச்ச கட்டத்தை அடைந்து திருப்தியடைவார்கள்.
பெண்கள் வெளிப்படுத்தும் செய்கைகளிலிருந்து கலவியின் போது எந்த விதமாக நடந்து கொண்டால் அவளுக்குத் திருப்தியளிக்கும் என்பதை ஆண் தெரிந்து கொள்ள முடியும். ஆண் கலவியில் ஈடுபட்டிருக்கும் போது பெண்ணின் பார்வையானது உடலின் ஏதாவதொரு பாகத்தின் மீது விழலாம். அப்பொழுது அந்தப்பகுதியில் ஸ்பரிசத்தை அவள் விரும்புகிறாள் என்று அர்த்தமாகும். இதையெல்லாம் கவனித்து ஆண் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு பெண்ணின் இன்பத்தை அதிகரிக்கத் தகுந்தவற்றை செய்து அவளையும் கலவியில் திருப்திப் படுத்த வேண்டும்.
கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணினுடைய புட்டத்தில் தட்டலாம். இதைப் பலமாகச் செய்தால் விந்து வெளிப்படுவதைத் தடுக்கலாம். காம உச்ச நிலையை தான் அடையும் வரை பெண் இப்படியே தட்டிக் கொண்டிருந்தால் இருவரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும்.
கலவிக்குப் பின் 
கலவித்தொழில் முடிந்ததும் ஆணும் பெண்ணும் அடக்கமாகப் படுக்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காமல் குளிக்கச் செல்ல வேண்டும். கலவியின் போது உடல் தளர்ந்து உடையெல்லாம் கசங்கியிருக்கும். சோர்ந்தும், களைத்தும், நலுங்கியும் உள்ள உடலோடு காட்சியளித்தால் இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்குள்ள கவர்ச்சியானது குறைந்து விடும். இதற்காகத்தான் கலவி முடிந்ததும் ஒருவரையொருவர் பார்க்காமல் சென்று குளித்து விட்டு வரவேண்டும் என்பது.
குளித்து முடிந்ததும் புதிய உடை அணிந்து கொண்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து அமர வேண்டும்.
பெண்ணை ஆண் தன் இடக்கரத்தால் அணைத்துக் கொண்டு இனிய பானம் குடிக்குமாறு கேட்க வேண்டும். ருசியான இனிப்புகளை அவளை அச்சமயம் உண்ணச் செய்து தானும் உண்ண வேண்டும். சூடான பால், மாம்பழம், ஆரஞ்சு முதலான சாறுகளையும் அல்லது தங்களுக்கு விருப்பமான பானங்கள் எதையும் பருகலாம்.
ஏதேனும் அறைக்குள் இருந்தால் வராந்தாவுக்கோ மாடிக்கோ சென்று நிலவொளியின் அழகை அனுபவிக்க வேண்டும். இனிய காதல் பேச்சுகள் பேச வேண்டும். இதனாலும் உணர்வூட்டும் பானங்கள், உணவு வகைகள் உட்கொண்டதாலும் மீண்டும் காம இச்சை கிளர்ந்து எழும்!

No comments:

Post a Comment