Sunday, July 22, 2012

எம். ஜி .ஆரை வைத்து பல படங்களை தந்த தேவர், சிவாஜி வைத்து ஏன் படம் எடுக்கல?



எம். ஜி .ஆரை வைத்து பல படங்களை தந்த தேவர், சிவாஜி வைத்து ஏன் படம் எடுக்கல? என்று பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

எம் ஜி ஆர் - சிவாஜி இருவரும் நண்பர்களாக இருந்தாலும் தொழில் முறையில் போட்டியாளராகவே இருந்துள்ளனர் .

ஒரு சந்தர்பத்தில் தேவர் எம்.ஜி.ஆரிடம் "எப்பவும் சிவாஜியை வைத்து படம் பண்ணமாட்டேன் "என்று சத்தியம் செய்து கொடுத்துள்ளார் . இந்த கருத்தை தேவரின் ஆஸ்தான வசனகர்த்தா அருர்தாஸ் தனது சமீபத்தைய புத்தகத்தில் கூறியுள்ளார்.
 — 





P.U.சின்னப்பா ,பானுமதி ,எம் .ஜி .ஆர் நடித்த "ரத்னகுமார்" படத்துக்கான விளம்பரத்தை புதுமையாக செய்ய நினைத்த அதன் தயாரிப்பாளர் முருகன் டாக்கீஸ் அதிபர் சீதாராமய்யர். மதுரையில் விமானத்தில் இருந்து விளம்பர நோட்டீசுகளை வீச செய்துள்ளார் .பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளிவந்த "ரத்னகுமார்" சரியாக ஓடவில்லை என்பது கூடுதல் தகவல் ..


No comments:

Post a Comment