Thursday, July 12, 2012

இலங்கையில் அதிக வயதான (114) எலியாஸ் அப்புஹாமி காலமானார் !



இலங்கையில் மிக வயதான நபராக கருதப்பட்ட களனி கோப்பியாவத்தையைச் சேர்ந்த 114 வயதான எலியாஸ் அப்புஹாமி காலமானார்.
அவர் நான்கு தலைமுறைகள் வாழ்ந்து, மகன், பேரன், பேத்தி, பூட்டன்களையும் சேர்ந்து 50 பேரை பார்த்துவிட்டார்.
1898 பெப்ரவரி 13 ம் திகதி பிறந்த அப்புஹாமி இவ்வாறு நீண்ட ஆயுளைக் கொண்டிருந்தமைக்கு அவர் மாமிச உணவுகளை தவிர்த்து இயற்கை உணவுகளை உட்கொண்டமையே காரணம் என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர் இறக்கும் தறுவாயில் உடல் நலத்துடனும். சிறந்த மனநிலையிலும் இருந்தார் எனவும் அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு நீண்ட ஆயுளைக் கொண்ட எலியாஸ் அப்புஹாமியின் இறுதிக் கிரியைகள் நேற்று களனி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment