உலகநாடுகளை ஆட்டிப்படைக்கும் அமெரிக்காவில் நடக்கும் கேவலம் !
அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகியுள்ளது. உலகநாடுகளை ஆட்டிப்படைக்கும் மற்றும் பெரும் செல்வந்த நாடு எனக் கருதப்படும் அங்கே கொலை கொள்ளைகள் மற்றும் அடாவடிகள் என்பன மிக மலிவாகப் போய்விட்டன. நியூயோர் புறநகர்ப் பகுதி ஒன்றில் மலசல கூடத்துக்குள் சென்ற 14 வயதுச் சிறுவன் ஒருவனின் கண்ணாடியை(கூலிங் கிளாஸை) பறிக்க 3 பேர் கொண்ட கும்பல் முனைந்துள்ளது. அச் சிறுவன் அணிந்திருந்த கண்ணாடியை இலகுவாகப் பறித்துக்கொண்டு இவர்களால் ஓடமுடியும். இருப்பினும் அச்சிறுவனை சரமாரியாகத் தாக்கிவிட்டு அவனது கண்ணாடியை பறித்துக்கொண்டு ஒரு இளைஞர் செல்ல, போதாக்குறைக்கு மற்றைய இளைஞர் ஒருவர் அச்சிறுவனை தன் பங்கிற்கு மீண்டும் தாக்கி அவனது சப்பாத்துகளையும் களட்டிச் செல்கிறான் ! இது தான் இன்றைய வல்லரசான அமெரிக்காவின் நிலை ! (காணொளி இணைப்பு)
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=2780
No comments:
Post a Comment