Wednesday, June 20, 2012

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு புதிய சட்டம்!



சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு புள்ளிகளை வழங்கும் புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.இந்தப் புதிய சட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்தில் முதலாவதாக இத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் எஸ்.எச்.ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டம் தொடர்பான மாதிரியொன்று முன்வைக்கப்பட்டு அதனை பொலிஸ் திணைக்களத்தில் காட்சிப்படுத்தி அதன் குறைபாடுகள் தீர்க்கப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மது போதையில் வாகனங்களைச் செலுத்துவதால் விபத்துகள் இடம்பெறுகின்றன. இது போன்ற குற்றங்களுக்கான நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட அவர்,

புதிய சட்டத்தின் படி 24 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களை ஒரு வருட காலத்திற்கு தடை செய்வதற்கான கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment