Friday, June 8, 2012

இலங்கையில் இரட்டைக் குடியுரிமை முறைமை மீள அறிமுகம் !



இலங்கையில் இரட்டைக் குடியுரிமை முறைமை மீள அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் குடியுரிமைப் பெற்றுக் கொண்டுள்ள இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன், ரோமிற்கு சென்றுள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் சிங்கள ஊடகமொன்றுக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் சிறிய திருத்தங்களுடன் மீளவும் இரட்டைக் குடியுரிமை முறைமை அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment