Saturday, June 2, 2012

எயிட்ஸ் நோயைப் பரப்பும் புதுவகை ரத்தம் குடிக்கும் பூச்சி !


அமெரிக்க விஞ்ஞானிகள், இஸ்லாமிய இனத்தவரை அழிக்க எயிட்ஸ் என்னும் உயிர்கொல்லி வைரசைக் கண்டு பிடித்தனர் என்று பலராலும் நம்பப்படுகிறது. எயிட்ஸ் என்னும் வைரஸ் மனித குலத்தை முன்னர் எபோதும் தாக்கியதே இல்லை. காரணம் மனித குலம் விஞ்ஞானரீதியாக வளர்ச்சியடையாத காலத்தில், இந் நோய் தாக்கியிருந்தால் மனித குலமே அழிந்துபோயிருக்கும். குறிப்பாக நெல், அல்லது கத்தரிக்காய் போன்ற பயிர்வகைகளை, அல்லது தானியங்கள் ஆராய்ந்து இரண்டு வகை பயிர்களை இணைத்து புதிய வீரியம் மிக்க பயிர்களை விஞ்ஞானிகள் உருவாக்குவது குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வாறு இரண்டு வைரஸ்சை எடுத்து அதனூடாக ஒரு வைரசை உருவாக்கி, பின்னர் அதற்கும் இன்னொரு வைரசுக்கும் மேலும் ஒரு வைரசைப் பிறக்க வைத்து, இப்படியாக பன்மடங்கு வீரியம் மிக்க வைரசை அமெரிக்க தயாரித்தது என நம்பப்படுகிறது. குறிப்பாக இவ்வகையான வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்கள், உடலுறவில் ஈடுபடும் வேளை, பெண்களின் பிறப்பு உறுப்பில் சுரக்கும் ஒருவகையான நீரில், இந்த வைரஸ் காணப்படும்.

எனவே இவை இலகுவாக ஆணுக்குத் தொற்றிக்கொள்ளும். அதேபோல எயிட்ஸ் நோய் தாக்கிய ஆண் உடலுறவுகொள்ளும்போது ஆண் உறுப்பில் இருந்து வெளிப்படும் விந்து, மற்றும் ஏனைய திரவங்களிலும் இந்த வைரஸ் காணப்படும். இவை இலகுவாகப் பெண்களுக்கும் தொற்றிக்கொள்ளும். அமெரிக்க இவ்வகையான வைரஸை உருவாக்கி அதனை குரங்கில் பரீட்சித்துப் பார்தவேளை, அக் குரங்குகளில் ஒன்றி சற்றும் எதிர்பார்க்காத வகையில், அங்கிருந்து தப்ப முயன்று இறுதியில் காவலாளிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது. இக் குரங்கு தாக்கிய காவலாளி எயிட்ஸ் நோய் தாக்கத்துக்கு ஆளாகி பின்னர் அது, ஆபிரிக்காவில் முதலில் பரவ ஆரம்பித்தது எனச் சிலர் கூறிவருகின்றனர். இந் நோயை கட்டுப்படுத்த, இதுவரை சரியான எந்த ஒரு மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந் நிலையில் புதிய அச்சுறுத்தல் ஒன்று கிளம்பியுள்ளது. ரத்தம் குடிக்கும் பூச்சிகளால் அமெரிக்காவில் உயிர்க் கொல்லி நோயான எய்ட்ஸ் நோய் பரவுவது தற்போது தெரிய வந்துள்ளது. நாம் முன்னரே குறிப்பிட்டது போல எயிட்ஸ் என்னும் வைரஸ் வீரியம் மிக்கது. சில வகையான வைரசுகள், உடலை விட்டு வெளியே வந்தால் இறந்துவிடும். சில வைரசுகள் உயிர்வாழ ஏதுவான அழுத்தம், வெப்பம் என்பன தேவைப்படும். ஆனால் உடலை விட்டு வெளியே வந்து காற்றில் குறிப்பிட்ட சில மணி நேரம் உயிர்வாழக்கூடியது இந்த எயிட்ஸ் என்னும் வைரசாகும். எனவே மனித ரத்தம் குடிக்கும் பூச்சிகள் ஊடாக இது பரவுவது என்பது பெரியவிடையம் அல்ல.

தற்போது அமெரிக்க நாடுகளில் ரத்தம் குடிக்கும் பூச்சிகள் மூலம் புதிய வகை உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. இது புதிய வகை எய்ட்ஸ் நோய் என ஹுஸ்டனில் உள்ள பேய்லர் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நோயை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது என்றும், மூன்று மாதத்திற்கு பிறகே கண்டறிய முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நோய் இதயம் மற்றும் குடல் பகுதியை அதிகம் தாக்குகிறது. எயிட்ஸ் நோயை காவும், இதுபோன்ற பூச்சிகள், வேறுவகையான சில நோய்களையும் காவி வருகின்றன. அமெரிக்க கண்ட நாடுகளான பொலிவியா, மெக்சிகோ, கொலம்பியா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் 80 லட்சம் பேர் இந்த கொடிய நோய் தாக்குதலுக்குள்ளாகி அவதிப்பட்டு வருகின்றனர் என மேலும் அறியப்படுகிறது.

No comments:

Post a Comment