Monday, May 21, 2012

அமெரிக்காவில் சிறு பிள்ளைக்கு நடந்த விபரீதம்:


அமெரிக்காவில் உடுப்பு சலவை செய்யும் இடம் ஒன்றில், தந்தையின் விளையாட்டு வினையில் முடிந்துள்ளது. சிறுமி, அவரது தாய் தந்தை ஆகியோர் உடுப்பு சலவை செய்யும்(இயந்திரம் மூலம்) இடத்துக்குச் சென்றுள்ளனர். அங்கே அப்பா விளையாட்டாக தனது மகளை உடுப்பு காயவைக்கும் இயந்திரம் ஒன்றினுள், வைத்து பூட்டியுள்ளார். ஆனால் முன்னரே அதில் காசு போடப்பட்டு இருந்ததால் அது உடனே ஸ்டாட் ஆகிவிட்டது. அவரது மகள் அதனுள் சிக்கிவிட்டார். எவ்வளவு கடுமையாக முயற்சித்தும் அவ்வியந்திரத்தின் கதவை அவரால் திறக்க முடியவில்லை. இதானல் தாயும் தந்தையும் பதறிப்போனார்கள். ! தந்தையார் உடனே விரைந்துசென்று அந் நிலையத்தின் பாதுகாப்பாளரை அழைத்துவந்துள்ளார்

அதுவரை சுமார் 1 நிமிடம், உலரவைக்கும் இயந்திரத்தினுள் சிக்கித் தவித்துள்ளார் அச் சிறுமி. விரைந்து வந்த காவலாளி உடனடியாக மின்சாரத்தை துண்டித்தார். அதன் பின்னர் கதவுகளைத் திறந்து தந்தையார் பிள்ளையை வெளியே எடுத்துள்ளார். என்ன ஆச்சரியம், அதிஷ்டவசமாக அச் சிறுமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.(காணொளி இணைப்பு)


No comments:

Post a Comment