Saturday, May 26, 2012

கனேடிய பிரஜையின் படுகொலைக்கு முக்கிய சூத்திரதாரி ஒரு குடும்பப்பெண்!



[ வெள்ளிக்கிழமை, 25 மே 2012, 08:38.54 PM GMT ]
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் கனேடியப் பிரஜையின் படுகொலையுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரியான குடும்பப் பெண்ணை 6ம் திகதிவரையில் விளக்க மறியலில் வைக்குமாறு இன்று மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும், இளம் குடும்பப் பெண் நேற்று மாலை மாவட்ட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். இவரே முக்கிய சூத்திரதாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 3பிள்ளைகளின் தாயான இவர் தொலைபேசியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், கண்டாவளையை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலிப்பது போல நடித்து அவரிடமிருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுள்ளார்.
இதேபோல் இவருடைய குடும்பம் கொலை செய்யப்பட்ட கனேடிய பிரஜையின் நிலத்திலேயே தங்கியிருக்கின்றது. எனவே இந்த நிலத்தையும் சொத்தையும் அபகரிக்க அந்த கனேடிய பிரஜையினை படுகொலை செய்ய தூண்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
இதனடிபடையில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுடன் சேர்த்து குறித்த பெண்ணையும், 6ம் திகதிவரையும் விளக்க மறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த பெண்ணிடம் ஏற்கனவே கிராமசேவகர் ஒருவர் பெருமளவு பணத்தை கொடுத்து ஏமார்ந்துள்ளார். மேலும் ஏற்கனவே சந்தேக நபர்கள் பணம் செலுத்திய கணக்கிலக்கம் தனது என குறித்த பெண் நீதிமன்றில் ஏற்றுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment