Wednesday, April 11, 2012

சாரதிக்கு மாரடைப்பினால் தாறுமாறாக ஓடிய பேருந்தை நிறுத்திய சிறுவன்


[ Wednesday, 11 April 2012, 12:34.36 PM. ]
இங்கிலாந்தில் உள்ள பைப் என்ற இடத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் அமர்ந்து இருந்தனர். பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பேருந்து தாறுமாறாக ஓடியதைக் கவனித்த அருகில் இருந்த 11 வயது மாணவன் சமயோசிதமாக செயல்பட்டு பேருந்தை ஸ்டியரிங்கை பிடித்து பஸ்சை சரியான பாதையில் செல்ல வைத்ததுடன் பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தினான்.
இதனால் பேருந்தில் இருந்த அனைவரும் காயமின்றி தப்பினர். மேலும் பேருந்தில் இருந்த மாணவர்களே அவசர உதவிக்கு தகவல் கொடுத்து சாரதியை மருத்துவமனையில் சேர்த்தனர்.

No comments:

Post a Comment