Monday, April 30, 2012

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட நபர் திருகோணமலையில் படுகொலை


[ திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2012, 12:00.03 AM GMT ]
சமீபத்தில் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 28 வயது தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலைசெய்யப்பட்டுள்ளார் என தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 18ம் திகதி இவர் திருகோணமலையில் வைத்து கொல்லப்பட்டதாக மேலும் அறியப்படுகிறது
அண்மையில் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் தலைவெட்டப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார் என்ற செய்தியை நாம் பிரசுரித்திருந்தது நினைவிருக்கலாம்.
இச் சம்பவத்தை அடுத்து, இலங்கை அதிரடிப்படையினர் திருகோணமலையில் பாரிய இரகசிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை நிகழ்த்தி இருந்தனர்.
இதன்போது கடந்த சில நாட்களின் முன் சுமார் 300 பேர் கைதுசெய்யப்பட்டு இரகசியமாக அவர்கள் அனைவரையும் வெலிகந்தை முகாமுக்கு கொண்டுசென்றது அதிரடிப்படை.
இச் சம்பவத்தோடு, இக்கொலையும் தொடர்புற்றிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
குறிப்பிட்ட 28 வயது இளைஞர் சம்பவ தினம் அன்று வெளியேசென்று வீடு திரும்பிய நிலையில், தன்னைச் சிலர் பின் தொடர்ந்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். பின்னர் அவசர வேலை நிமித்தம் அவர் திரும்பவும் வெளியே சென்றவேளை அவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு உயிராபத்து இருக்கிறது என்பது தெரிந்தும், பிரித்தானிய அரசு தொடர்ந்தும் தமிழர்களை நாடுகடத்தி வருகின்றமை வருத்தத்தக்கதும், கண்டிக்கத்தக்க விடயமுமாகும்.

No comments:

Post a Comment