கொலன்ட் நாட்டின் பிரதமர் மார்க் றூற் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அடுத்த தேர்தலை நடாத்தும்படி அவர் மகாராணிக்கு தகவல் வழங்கியுள்ளார். கடந்த சில வாரங்களாக நடைபெற்ற பொருளாதார மீதம் பிடித்தல் விவகாரத்தில் உடன்பாடு காண முடியாது முறிவு நிலை ஏற்பட்டதால் இவர் மேற்கண்ட முடிவுக்கு வந்துள்ளார். 14 முதல் 16 பில்லியன் யூரோவை வரவு செலவுத்திட்டத்தில் மீதம் பிடிக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டாயமான அழுத்தத்தை அங்குள்ள அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பித்து ஒரு முடிவுக்கு வர இயலாத நிலையில் அவர் தேர்தலுக்குள் நுழைகிறார். கடந்த 2010 அக்டோபரில் இருந்து இவர் கூட்டணி அரசின் பிரதமராக இருந்து வருகிறார்.
http://www.vannionline.com/2012/04/blog-post_1462.html
No comments:
Post a Comment