கல்கி அவதாரம் ஒரு வீரன் வாளுடன் குதிரையில் வருவது போல காட்டப்பட்டிருக்கும்,கடைசி அவதாரம் என கண்ணனால் சொல்லப்பட்ட கல்கி அவன் சொன்ன வடிவில் இல்லாமல் போதைச்சாமியார் விஜயகுமார் வடிவில் ஆந்திராவில் இளைஞரின் வாழ்வை அழிப்பார் என்று யார் சொன்னது.அவர் என்ன அற்புதம் செய்தார் என்று மக்கள் அவரை நம்புகிறார்கள்??அரசு,மருத்துவத்துறை,காவற் துறை,கட்சிகள்,மனித உரிமைகள் அமைப்புகள்,மகளீர் அமைப்புகள்,முற்போக்கு மன்றங்கள் என்ன செய்கின்றன??நாம் கடவுள் உண்டு என்பதை நூறு வீதம் நம்புகிறோம்.எந்த ஒரு அவதாரத்திலும் விஷ்ணு போதைக்கடிமையானதில்லை,பக்தரும் அப்போது அவருக்கு இருந்ததில்லை.கிருஷ்ணனுக்கு கூட நண்பர்கள்,விருப்பமானவர்கள் இருந்தனர்,தொண்டரோ,ஆசிரமமோ இருக்கவில்லை.மந்த பிறவிகளில் சத்ரியனானாக(ராம்,கண்ணன்,சித்தார்த்தன்),குலம் காக்கும் பரசுராமராக வாமனனாக மற்றும் மீன்,ஆமை,பன்றி,நரசிம்மம்(சிங்கமனிதன்)என்றாக அவதாரங்களில் மக்களை காக்கவே பிறந்ததாக கூறுகிறார்கள்.சிலவற்றில் தேவரை மட்டுமே காக்க அவதரித்துள்ளார்.எங்கும் இப்படியில்லை.கண்ணன் சொன்னது பொய்யா?இவர் சொல்வது பொய்யா?? மக்கள் ஏன் இப்படி ஏமாறுகிறார்கள்.கடவுள் நம்பிக்கை உண்மையால் மக்களிடம் இல்லை என்பதுதானே இதன் அர்த்தம்!!ஆசிரம உணவுகளை,மனிதர்களை மருத்துவ சோதனை செய்தாலே அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிடும்,இதுவே உண்மை மார்க்கம் என இந்துமதத்தை நம்புபவர்கள் செய்ய வேண்டியது.போலித்தனத்தால் ஒரு மார்க்கம் அழிவுக்கு செல்கிறது அது இந்து மார்க்கம்.சேது பாலம் கதை போல இங்கும் கண்ணன் கூறியதை ஆராய்ந்தறிந்து இவரை தண்டிக்க உண்மை பக்தர்களும் அரசும் முன்வரவேண்டும்.காட்டில் முனிவர்கள் மனதை ஒருமைப்படுத்த போதைப்பொருள் பாவித்தார்கள்,நாட்டில் அல்ல.போதை விரும்பிகள் மதத்தை பயன்படுத்தி நாட்டையும் மக்களையும் ஏமாற்றல் அனுமதிக்கப்படக்கூடாது.அப்படி அனுமதிப்பவர்கள் கீதைக்கும் கண்ணனுக்கும் துரோகம் செய்த பாவிகளே அன்றி பக்தர்கள் அல்ல.கல்கி வீரனே அன்றி துறவியோ,சாதுவோ,போளிச்சாமியோ அல்ல.இது உறுதி.மக்களே விழியுங்கள்,இல்லையேல் கடவுள் உங்கள் உள்ளங்களை கடந்து வெளியேறிடுவார்.சிந்தியுங்கள்.போலிகளை நம்பி,பொருளுக்கும் போதைக்குமாக தெய்வ சாபத்தை பெறாதீர்கள்.இவன் போலியே!!
சன் வீடியோ பகுதி -1
சன் வீடியோ பகுதி -2
சன் வீடியோ பகுதி -3
No comments:
Post a Comment