Saturday, March 31, 2012

யாழில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் ஜனனதின நிகழ்வுகள் !


 அவர் நினைவை பிழைப்புக்காக கொண்டாடும் இவர்கள் அவர் கனவை கனவாக்கிய தியாகிகள்!
தந்தை செல்வநாயகத்தின் 114 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் வரலாற்றில் என்றுமில்லாத வகையில், சிறப்பான முறையில் இன்று, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சிறப்புற நடத்தப்பட்டது.
ஈழத்து காந்தி எனப் போற்றப்பட்ட செல்வாவின் ஜனன தினத்தில் இன்று, அரசியல்வாதிகள், அரசியல் ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். காலை 9 மணிக்கு தந்தை செல்வா சதுக்கத்தில் மாலை அணிவித்தல் மற்றும் மலர் வணக்கம் போன்றவற்றுடன், இன்றைய நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.சிறீதரன் ஆகியோரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், சித்தார்த்தன், மற்றும் ஆனந்த சங்கரி, மற்றும் தமிழ்த் தேசிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
இதன் தொடர் நிகழ்வு இன்று பிற்பகல் நாவலர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment