பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா, சில மாதங்களுக்கு முன்பு மூட்டு வலியால் அவதிப்பட்டதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
சிகிச்சைக்கு பின்பு குணமடைந்து வீடு திரும்பினார்.
இதற்கிடையில் காளகஸ்தி கோவிலுக்கு சென்ற போது விடுதி அறையில் மயங்கி கீழே விழுந்து, தலையில் படுகாயமடைந்து ரத்து கட்டு ஏற்பட்டது.
அப்போது சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சுயநினைவு இழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் மனோரமாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மனோரமா உறவினர் தரப்பில் கூறும்போது, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், நாளை வீடு திரும்பி விடுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.
|
No comments:
Post a Comment