Thursday, March 15, 2012

ஏப்ரல் 13 முதல் மும்மொழிகளிலும் பஸ் பெயர்பலகை பொருத்துவது கட்டாயம்


அனைத்து மாகாணங்களிலும் சேவையில் ஈடுபட்டுள்ள பயணிகள் பஸ்களில் பெயர்பலகையை சரியாகப் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு மாகாண போக்குவரத்து அதிகார சபையிடம் தனியார் போக்குவரத்து அமைச்சு கோரியுள்ளது.

இதன்போது சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் பஸ்ஸின் சேவை இடம் குறித்த பெயர்பலகை முறையாக பொருத்தப்பட வேண்டும் என அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 

இத்திட்டத்தை ஏப்ரல் 13ம் திகதிக்கு முன்னர் செயற்படுத்துமாறு மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் விக்டர் சமரவீர தெரிவித்துள்ளார். 

மனித உரிமை ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றுக்கு அமைய குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

No comments:

Post a Comment