Friday, March 9, 2012

இலங்கையில் கடந்த வருடம் 1165 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்!!


இலங்கையில் கடந்த வருடம் 1165 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.ஐ. நா நிறுவனம் ஒன்றால் ஒழுங்கு பண்ணப்பட்டு கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செயலமர்வு ஒன்றில் இத்தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.




பொலனறுவை, அனுராதபுரம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கற்பழிப்புகள், பால்ய விவாகங்கள், துஷ்பிரயோகங்கள் அதிகம் இடம்பெற்று இருக்கின்றன.
இலங்கையில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்று செயலமர்வில் பங்கேற்ற பேச்சாளர்கள் கவலை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment