Wednesday, February 22, 2012

11 பாக்கிஸ்தானியர்கள் சேர்ந்து பள்ளி மாணவிகளை கற்பழித்துள்ளனர் !


பிரித்தானியாவின் மன்செஸ்டர் பகுதியில் 11 பேர் அடங்கிய பாக்கிஸ்தான் கும்பல் ஒன்று பள்ளி மாணவிகள் பலரைக் கற்பழித்துள்ளனர். அவர்கள் மாணவிகளுக்கு மதுபாணம் மற்றும் போதைப் பொருட்களை வாங்கிக்கொடுத்து அவர்கள் போதையில் இருக்கும்வேளை கற்பழித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 13 வயது தொடக்கம் 16 வயதுக்கு உட்பட்ட பல மாணவிகள் இவ்வாறு இவர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இக் கும்பலில் இருக்கும் ஒரு நபர் தாம் ஒரு பெண்ணுடன் உடலுறவை வைத்துக்கொண்டால், அப்பெண்ணை தனது நண்பருக்கு தாரை வார்ப்பதும், இதனைத் தொடர்ந்து அந் நபர் தனது நண்பருக்கு இப் பெண்ணைக் கொடுப்பதுமாக மாறி மாறி இக் கும்பல் பல பெண்களைக் கற்பழித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இவர்களால் கற்பமான 13 வயதுடைய பெண் ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தை அடுத்தே பொலிசார் இந்தப் 11 பேரையும் வலைவீசிப் பிடித்துள்ளனர். வீட்டில் இருந்து தப்பி ஓடி வந்த பள்ளிச் சிறுமிகள், தனியாக வசித்துவரும் சிறுமிகள் மற்றும் தாய் தந்தையர் பாதுகாப்பில் இல்லாமல் வேறு நபர்களின் பாதுகாப்பில் வளரும் பள்ளிச் சிறுமிகளையே இவர்கள் குறிவைத்துள்ளனர். அவர்களுடன் பழகி அவர்களை மதுப்பழக்கத்துக்கு அல்லது போதைப்பொருளுக்கு அடிமையாக்கி பின்னர் அவர்கள் போதையில் இருக்கும்வேளை அவர்களைக் கற்பழிப்பது இவர்கள் வாடிக்கை.

தான் உறவுகொண்ட பெண்ணை தனது நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி அவர்களுடனும் உடலுறவுகொள்ளுமாறு இவர்கள் இப் பெண்களை வற்புறுத்தியும் உள்ளனர். பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட இந்தப் 11 பேரும் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர். இருப்பினும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment