Tuesday, January 31, 2012

மிகப்பெரிய அன்னதானம்!!



தருமருக்கு நீண்டநாள் ஒரு கனவு
ஒரு மிகப்பெரிய  அன்தானம் செய்ய வேண்டும் என்பதுதான் அது
இதுவரை இப்படியொரு அன்தானம் எவரும் செய்திருக்க கூடாது
இனியும் எவரும் செய்யமுடியாதபடியொரு அன்தானமாக அது
இருக்க வேண்டும் என எண்ணினார் அதற்கான ஏற்பாடுகளை செய்தார்
உலகில் உள்ள அனைத்து சமையல் கலைஞர்களும் வரவழைக்கப்பட்டனர்
சாப்பிடவரும் மக்கள் எந்த வகை உணவு கேட்டாலும் உடன் தயாரித்து வழங்க
ஏற்பாடு செய்யப்பட்டது
ன்தானமும் நடந்தது லட்சக்கனக்கான மக்கள்
வந்து உணவருந்தி சென்றனர் வந்தஅனைவரும் ன்தான ஏற்பாட்டை
பார்த்து வியக்காதவர்களே இல்லை தருமர் எதிர்பார்த்தது போலவே
மக்களும்
இதுவரை இப்படியொரு  அன்தானம் எவரும் செய்திருக்கவில்லை
இனியும் எவரும் செய்யமுடியாது என்றே பேசி சென்றனர் இதனைகேட்ட
பெருமைசாலியான தருமருக்கே சற்றே கர்வம் வந்துவிட்டது

உடன் ஒரு வினோதமான ஒரு காட்சியை தருமர் கண்டார்
ஒரு எலி தருமர் நடந்த பாதைகளில் எல்லாம் உருண்டு புரண்டது
அந்த எலியின் உடலின் ஒருபாதி தங்கமாக இருந்தது மறுபாதி
இயல்பான எலியின் உடலாகவே இருந்தது
தருமர் அந்த எலியை பார்த்து ஏன் இப்படி செய்கிறாய் எனக்கேட்டர் அதற்கு அந்த எலிஒரு கதையை கூறியது.

இது ஒரு உண்மைக்கதை 50 ஆண்டுகளுக்கு முன்பு இதேஊரில் கடும் பஞ்சம் நிலவியது பஞ்சத்தினால் பல குடும்பங்கள் பட்டினியால் இறந்தனர்
அதில் ஒருகுடும்பம் உணவின்றி சாககிடந்தனர் இன்னும் ஒருநாள் இவர்கள் உணவருந்தவில்லை எனில் அக்குடும்பத்தினரும் சாகவேண்டியதுதான் அதில் ஒருவன் மற்றவர்களுக்கும் சேர்த்து உணவு தேடி தட்டுத்தடுமாறி சென்றான்
அன்றுமாலை சிறிது கோதுமை கொண்டுவந்தான் அதை மாவரைத்து ஒரு ரொட்டி செய்தனர் அந்த ரொட்டியை சாப்பிட்டால் இன்னும் ஒருநாள் ஜீவித்திருக்கலாம்
அக்குடும்பத்தினர் அந்த ஒரு ரொட்டியை சாப்பிட அமர்ந்தனர் அப்போது வெளியே அய்யா தர்மம் செய்ங்க என குரல் கேட்டது உடன் அவன் எழுந்துசென்று அந்த ரொட்டியை தர்மம் செய்துவிட்டான்

தர்மம் பெற்ற பிச்சைக்காரன் அந்த ரொட்டியை சாப்பிட்டு சென்றுவிட்டான்
சிறிதுநேரத்தில் அக்குடும்பத்தினர் இறந்து விழுந்தனர் அந்த பிச்சைக்காரன் சாப்பிட்ட ரொட்டித்துன்டில் கீழேசிந்தியவற்றை நான்(எலி) சாப்பிட்டேன்
அதனை சாப்பிட்டதும் என் உடலில் பாதி தங்கமாக மாறியது
உடன் வானத்திலிருந்து அசரீரீ கேட்டது

உலகில் இதுவரை செய்த தானத்திலேயே இதுவே சிறந்த அன்தானம் என்பதால் அதில் சிந்தியதை நீ உண்டதால் உன் உடலில் பாதி தங்கமாக மாறியது
இனிவருங்காலத்தில் இதற்கு இணையான ஓர் அண்ணதானம் எவரும் செய்தால் அவர் பாதம் பட்ட மண்ணில் உன் உடல் பட்டால் உன் மீதிஉடலும் தங்கமாக மாறும் என அசரீரீ கூறியது
நீங்கள் செய்த இந்த பிரமாண்டமான அன்தானத்தை கண்டு அதற்கு இணையாகஇருக்குமென்று உங்கள் பாதம்பட்ட இடத்தில் நான் விழுந்து புரண்டேன்
ஆனால் என்மீதி உடல் தங்கமாக மாறவில்லை
என எலி கூறியதும் தருமருக்கு தர்மசங்கடமாகிபோனது

லட்சக்கணக்கானவர்கள் திருப்தியாக சாப்பிட்டும் ஒரே ஒருவனுக்கு ஒரே ஒரு ரொட்டியை தானமாக கொடுத்ததற்கு இணையாகவில்லை ஏன் தெரியுமா
அவன் வெறும் ரொட்டியை தானமாக கொடுக்கவில்லை அதில் அவன் உயிர் கலந்திருந்தது

பாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது weasel எனப்படும் ஒரு வகை மரநாய். எலி அல்ல.
இதன் தொடர்ச்சியாக இன்னொரு கதையும் பாரதத்தில் உண்டு. தருமருக்கு தன்னை விட தானம் செய்வதில் உயர்ந்தவரில்லை என்ற கர்வம் உண்டு. போர் முடிந்து அரசாட்சி ஏற்ற போது அனைவரும் வணங்கி கண்ணன் மட்டும் வணங்காதது வருத்தத்தை தந்தது. புரிந்து கொண்ட கண்ணன் புன் சிரிப்புடன் தருமனுக்கு புரியவைத்தார் .

தருமரை அழைத்து கொண்டு பாதாள உலகம் போய்வரலாம் என்று கிளம்பினார். பாதாள உலக எல்லையில் வந்த போது தாகம் ஏற்பட்டது தருமனுக்கு ஒரு வீட்டின் முன் தன்னீர் கேட்டனர் அந்த வீட்டு பெண்மனி 2 தங்க சொம்பில் நீர் கொண்டு வந்து தந்தார் உள்ளே சென்று விட்டார் . குடித்து முடித்து சொம்பை திருப்பி தர அழைத்தனர் ஆனால் அப் பெண்மனி எங்கள் நாட்டில் கொடுத்ததை திருப்பி வாங்கு வதில்லை வேண்டாமென்றால் ஓரத்தில் எறிந்து விட்டு போகவும் என்றாள். ஆச்சர்யபட்டுக் கொண்டே தருமர் மஹாபலி ராஜா அரண்மனை அடைந்தார் 
தருமரை கண்ணன் அறிமுகம் செய்தான் . இவர் பாரத நாட்டின் சக்ரவர்த்தி தினம் 500 பேருக்கு அன்ன தானம் செய்கிறார் மஹா தர்ம ப்ரபு என்றான் கண்ணன். உடனே மஹாபலி கண்ணை , காதை மூடிக்கொண்டார் ச்சே இவனை உடனே இந்த நாட்டை விட்டு வெளியேற்று. தினம் 500 பிச்சை காரனை உருவாக்கு கிறான் இவனை உன் நண்பன் என்று சொல்ல வெட்கமாயில்லை நான் கொடுக்க நினைத்தாலும் என் நாட்டில் வாங்குவோர் இல்லை என்றார். தர்மன் வெட்கி தலை குனிந்தான் . கர்வம் நீங்கினான். 

No comments:

Post a Comment