Monday, January 30, 2012

சிற்பக்கலை​யின் உச்சத்தை தொட்ட பனிக்கட்டி சிற்ப திருவிழா


பிறெக்ன்றிச் இன் கொலோறடோவில் ஆண்டு தோறும் நடைபெறும் பனிக்கட்டி சிற்ப திருவிழாவில் வடிவமைக்கப்பட்டிருந்த சிற்பங்கள் அனைத்தும் மிகவும் தத்துரூபமாகவும், சிற்பக்கலையின் அதிநுட்பத்தை எடுத்துக்காட்டும் வண்ணமாகவும் காணப்பட்டன.
மேலும் 21 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் இப்போட்டியில் 15 குழுக்கள் பங்கு பெற்றதுடன் ஒவ்வொரு குழுவும் தன் திறமையினை வெளிப்படுத்த 5 சிற்பங்களை செதுக்கியிருந்தன.
இந்த வருடத்திற்கான போட்டியில் கனடா, ஸ்பெயின், சீனா, பின்லாந்து, ஜேர்மனி, லட்வியா, ஏஸ்ரோனியா, சுவிஸ்லாந்து, அலஸ்கா, கொலோறடா, இடாகோ, விஸ்கொன்சின், மெக்சிக்கோ, கிரீஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment