பொழுதுபோக்கு விளையாட்டுக்களில் கிரிக்கட், காற்பந்து, பட்மின்டன் போன்ற விளையாட்டுக்கள் விளையாடுபவர்களை பார்த்திருப்பீர்கள். அதே போல சில இலக்குகளை அடைவதற்காக துச்சமென மதித்து உயிரை துறந்தவர்களை பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் எந்தவிதமான உயரிய இலட்சியங்களும் இல்லாமல் வெறும் பொழுதுபோக்கு விளையாட்டிற்காக உயிரைப் பணையம் வைக்கிறார்கள் லண்டனில் பேர்டன் எனும் இடத்தில் வசிக்கும் இந்த வினோத மனிதர்கள். இவ்விளையாட்டின் மூலம் தமக்கிடையே போட்டிகளை ஏற்படுத்திக் கொண்டு சேறு, நெருப்பு, போன்றவற்றிற்கு ஊடாக ஓடுவதுடன் பலகைகளால் ஆன சிலுவைகளையும் சுமந்து ஓடி தமது உடலை வேதனைப்படுத்தி சந்தோசமடைகிறார்கள். |
No comments:
Post a Comment