Thursday, January 26, 2012

நேற்று 17 வயது மாணவி கடத்தப்பட்டுக்கொலை !


பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை சக்கோட்டையைச் சேர்ந்த இருதயநாதர் மேரி டிலக்சனா (வயது17) என்ற மாணவியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிசார் தெரிவித்தள்ளனர். அல்வாய் வடக்கு றோ.க.த.க வில் கல்வி பயிலும் இந்த மாணவியின் சடலம் நேற்று  அவரது வீட்டுக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் மேலும் கூறினர்.

சக்கோட்டை பழைய வேதக் கோயிலுக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இருந்தே இவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவி தனது வீட்டுக்கு அண்மையில் வைத்து இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு பாலியல் இம்சைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே கொல்லப்பட்டுள்ளதாகச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிசாரும் இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்னர். தாயும் தந்தையும் வெளியே சென்றிருந்த சமயம் மாணவி அயலில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டு வீட்டுக்கு திரும்பிய மாலை 6.30 மணி தொடங்கி 6.45 மணி வரையான நேரத்திலேயே இந்தக் கடத்தல் இடம் பெற்றிருக்கலாம் எனவும் மாணவியைக் கடத்தியவர்கள் அருகில் இருந்த ஆட்கள் அற்ற வீடொன்றில் வைத்து கொலை செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது. மாணவியின் உடலெங்கும் நகக் கீறல்கள் காணப்படுகின்றன. அவரது ஆடைகளும் கலைந்து காணப்படுகின்றது.

No comments:

Post a Comment