Saturday, December 10, 2011

அழகொளிரும் நீர்வேலி-நீர்வேலியில் தென்னம் பிள்ளையில் பிள்ளையார்.. அதிசயம்

 
                                 

நீர்வேலி செல்வக்கதிர்காம முருகன் திருக்கோயிலுக்குச் சமீபத்திய வீடு
ஒன்றில் தென்னம்பிள்ளையின் அடிப்பகுதியில் தும்பிக்கை, முகம், வயிறு,
கைகள் போன்றவற்றுடன் பிள்ளையார் போன்ற உருவம் தெரிந்தது.
இதனை அடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன் குறித்த வீட்டின் உரிமையாளர்
அந்தத் தென்னம்பிள்ளையை வீட்டில் வைத்திருக்கப் பயந்து அதனை
செல்வக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் கொண்டு வந்து வைத்துள்ளார்.
அன்றிலிருந்து கடந்த இரு நாட்களாக ஏராளமானவர்கள் கோயிலுக்கு வந்து
தென்னம்பிள்ளைப் பிள்ளையாரைப் பார்த்துச் செல்கிறார்கள்.
இதே வேளை மேற்படி ஆலயத்தில் திருப்பணி வேலைகள் மிகவும் துரிதகதியில்
இடம்பெற்று வருகின்றன. 2012ம் ஆண்டின் முற்பகுதியில் இவ்வாலய
மஹாசம்பிரோஷண மஹாகும்பாபிஷேகம் நிகழ உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
தென்னம்பிள்ளைப் பிள்ளையாரின் படங்கள் இரண்டு இங்கு இணைக்கப்பட்டுள்ளன.



No comments:

Post a Comment