Sunday, December 25, 2011

உண்மை ஆதரவு பெற்ற எவனுக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு தேவையே இல்லை, பிரிட்டன் மகாராணி உதாரணம்.


நம்பிக் கெட்டவன் தமிழன்,தன் இனத்தை அல்ல, கடலில் உயிருக்கு போராடியவனை காப்பாற்றி, நட்புக்கொண்டாடி ,வெள்ளைத்தோழன் ஏமாற்ற மாட்டான் என்று நம்பி கெட்டவன்.பின் நாட்டை நண்பனின் கைகளில் கொடுத்து இனத்துக்கு துரோகம் செய்தவன் தமிழன். அந்நியனிடம் நாடு போவதைக்கண்டு கொதித்த தமிழன் துரோகியாக ,அவனை அடக்க அந்நியனை நாட்டுள் ஆயுதத்துடன் கொண்டுவந்து தன் இனத்தை பதவிக்காக போட்டுத்தள்ளியவன் தமிழன்.கடுகுக்கு அஞ்சி மிளகை வரவேற்று துன்பத்தை விலைகொடுத்தே வாங்கியவன் தமிழன்.இப்படியாக வரவேற்கப் பட்ட போர்த்துக்கீசர்,ஒல்லாந்தர் போன்றோரை ஒப்பந்தம் போட்டு அனுப்பிவிட்டு ஆசியாவை அடிமை விலங்கிட்டு ஆண்ட ராணியாரே train இல் பயணிக்கின்றார்,ஐந்து வருடம் மக்கள் சேவைசெய்ய வந்தவர்களோ நாட்டின் பொருளாதாரத்தை தமது பாதுகாப்புக்கேன்றே அழிக்கிறார்கள்.காரணம் அவர்கள் செய்யும் துரோகம் அதற்கு ஆசீவதிக்கும் வாக்காளர் பெருமக்களின் மூடத்தனம்.மக்களின் உண்மை ஆதரவு பெற்ற எவனுக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு தேவையே இல்லை,மக்கள் அவர்களை  பாதுகாப்பார்.அதற்கு சூரியன் அஸ்தமிக்கா முடியாட்சி செய்த பிரிட்டன் மகாராணி உதாரணம்.



No comments:

Post a Comment