Wednesday, November 9, 2011

யாழ். கல்வியங்காடு சேர்ந்தவர் கொலண்டில் வெட்டிக் கொலை


யாழ். கல்வியங்காடு சேர்ந்த சேனாதிராஜா லோகேஸ்வரன் (வயது-45) என்பவர் கடந்த முதலாம் திகதி கொலண்டில் இனந்தெரியாதோரினால் வெட்டிக் கொல்லப்பட்டார். 3 வருட காலமாக அந் நாட்டில் வசித்து வந்த இவர் தனது மனைவி, பிள்ளைகளை அந் நாட்டுக்கு அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன், அண்மையில் அவர்களுக்கான விசா வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இவர் இறப்பதற்கு முதல் நாள் தொலைபேசி மூலம் உறவினர்களுடன் உரையாடியதாகவும் பின்னர் அத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட போது பதில் அளிக்கப்படவில்லை எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவரது உடல் வெட்டுக் காயங்களுடன் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கொலண்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதும், இவரது குடும்பம் தற்போது வவுனியாவில் வசிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment