Sunday, November 27, 2011

சரத்பவாரின் கன்னத்தில் அறைந்த சீக்கிய இளைஞர்: கருணாநிதி கண்டனம்!!

அவன் ஆண்மகன்  அநியாயத்தை அடித்துக்கேட்டான்,அதை கண்டிக்கும் குடும்பத்துக்கு சொத்து சேர்த்த போற வயதில் கதிரையை கட்டிப்பிடித்து வாலிபரை வாழவிடாமல் செய்தவர் ,மற்றும் பதவிக்கு வர பல பொய்கள் சொன்ன தாடகை,சூர்ப்பணகைக்கு அடிக்க தமிழ்நாட்டில் எப்போது ஆண்மகன் வீரன் பிறப்பான்??அதற்கிடையில் புதிய பதவி வெறியர்களை இக்கோழைகள் பெருக்கிடுவாரே!!

[ வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011, 07:16.56 AM GMT +05:30 ]

சீக்கிய இளைஞர் ஒருவர் நேற்று(24.11.2011) மத்திய அமைச்சர் சரத்பவாரின் கன்னத்தில் அறைந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வுக்கு வேளாண்துறை அமைச்சரான சரத்பவார்தான் காரணம் என்றுகூறி நேற்று நாடாளுமன்ற வீதியில் உள்ள பொது அரங்கில் நேற்று நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க சரத் பவார் வந்தபோது, ஹர்வீந்தர் சிங் என்ற இளைஞர் பத்திரிகையாளர் பகுதியிலிருந்து வந்து அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இதைச் சற்றும் எதிர்பாராத பவார் நிலை தடுமாறினார். பின்னர் சமாளித்துக்கொண்டு விரைந்து அரங்கிற்கு வெளியே நின்றிருந்த காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
பவார் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டிப்பதாக கருணாநிதி இன்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment