Wednesday, October 12, 2011

வன்முறை உலகுக்கு அறிமுகமாக ஓர் இலகுவழியா?


கீழுள்ள விடயத்தை முகப்புத்தாக நண்பர் ஒருவர் போட்டிருக்கிறார்,அவர் தமிழை உலகெங்கும் கொண்டு சென்றது இலங்கை தமிழர் என்று கூறி இந்திய தமிழரையிட்டு வருந்தியுள்ளார்,
வாஸ்தவம்தான்,ஆனால் போராட்டத்தால் இடம்பெயர்ந்த தமிழரால் அறிமுகமான தமிழ் பின்னர் புலம் பெயர் தமிழரின் புலிப்போக்காலும்  பிரபாகரனின் தற்கொலைத்தாக்குதல்களாலும் உலகில் அறியப்பட்டது.உலகே பயங்கரவாத இயக்கமாக தடை செய்யுமளவுக்கு பிரபலமான இயக்கத்தின் தலைவரை உலகறியாது இருக்குமா?அத்துடன் புலம்பெயர் தமிழரும் அவரை பிரபலப்படுத்தியதால் தமிழ் புலிகளின் பிரபாகரனின் மொழியானதில் ஆச்சரியமென்ன??நீங்களும் குண்டுத்தாக்குதல்களையும் தற்கொலைத்தாக்குதல்களையும் செய்து தனிநாடு கேட்டு மக்களை திண்டாட்டத்திற்கு உள்ளாக்கினால் உங்களை மொழியாக தமிழ் உலகறியும். அப்கான் தலிபான்களை,அல்கைடாவை இன்னும் பல இப்படியான போராட்ட குழுக்களையும் அவர்கள் மொழிகளையும் உலகறியும்.

இது பெருமையான விடயம்தான் பெருமைப்படுங்கள்,வாழ்த்துக்கள்!!



என் நண்பர் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார்... அவர் என்னிடம் ஒரு விடயம் சொன்னார் .. அதை கேட்டு நான் திகைத்து போனேன் . அவர் சொன்னார் .. நான் சென்ற வருடம் வெளிநாடுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும். நாம் எந்த நாட்டில் இருந்து வருகிரோமா அந்த நாட்டு மொழில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால் என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி வரவேற்றார்கள். நான் அதுக்கு பதில் சொல்லவில்லை அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார் ஏன் நான் வணக்கம் சொன்னதுக்கு பதில் சொல்லவில்லை என்று கேட்டார் . நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்லுரிங்க என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே. அதான் பதில் சொல்லவில்லை. அவர்கள் கேட்டார்கள் நீங்கள் இந்தியன் தானே. ஆம் நான் இந்தியன் ஆனால் என் மொழி தமிழ் என்று சொன்னேன். அப்ப அவன் சொன்னான் அப்படி ஒரு மொழி இருப்பதாக தெரியவில்லையே ,, என்று சொன்னான் , என்னை கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி அவன் சிறிது நேரம் யோசித்து விட்டு ,, அவன் கேட்டான் ,,ஆ ஆ ஸ்ரீ லங்கா, LDD தமிழ் டைகர், பிரபாகரன் பேசுற மொழிதானே தமிழ் .அதை நீங்களும் பேசுறிங்கலா என்று கேடான் .நான் ஆஜ்ஜிரியத்தோடோடு ஆம் என்றேன் .. அவன் என்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று என்னை தமிழில் வணக்கம் சொல்ல சொல்லி. என் குரலை பதிவு செய்தார்கள் . பிறகு என்னிடம் தமிழில் வணக்கம் சொன்னார்கள். அவன் இனி இங்கே தமிழர்கள் வந்தால் வணக்கம் சொல்லுவோம் என்றார்கள் .. நான் வெளியே வந்து யோசித்தேன் .என்னடா தமிழ்நாட்டில் ஏலு கோடி தமிழன் இருக்கிறோம். எங்களை யாருக்கும் தெரியவில்லையே.. இலங்கை தமிழனை மட்டும் தெரியுது இவர்களுக்கு. அந்தமாரி நான் அந்த நாட்டில் பலபேரை சந்திதேன் .. நான் தமிழன் என்று சொன்னாலே அவன் கேகிறான். நீங்கள் இலங்கையா தமிழ் டைகரா என்று .. கேக்கிரார்கள். அப்பத்தான் எனக்கு புரிந்தது .நாம் இத்தனை கோடி தமிழன் இருந்து என்ன பயன் நம்மை யாருக்கும் தெரியவில்லையே .ஒன்று மட்டும் எனக்கு புரிந்தது. இந்த உலகத்துக்கு தமிழனையும் தமிழ் மொழியையும் அறிமுகம் செய்தவர் திரு பிரபாகரனும் ஈழ தமிழர்களும்தான் என்று புரிந்து கொண்டேன் .. பிரபாகரன் என்ற ஒரு தலைவன் மட்டும் இல்லை என்றால் இந்த உலகில் தமிழனை யாருக்கும் அடையாளம் தெரியாது .. நன்றி . இதை நான் உங்களிடம் சொல்லவேண்டும். என்று நினைத்தேன் எனக்கு பெருமையாக இருக்கு நானும் தமிழன் என்று.சொல்ல நன்றி

No comments:

Post a Comment