Saturday, October 22, 2011

முகம் பொலிவுடன் இருக்க காய்கறிகளின் இரகசியம்

அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கப்படுகின்ற மரக்கறிகளை விதம் விதமாக சமைத்து சாப்பிடுகிற போது அவற்றில் ஒளிந்திருக்கும் அழகுத் தன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள்.
கரட்: விட்டமின் ஏ அதிகமுள்ள காய் இது சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. கரட்டை பால்விட்டு விழுதாக அரைத்து, முகத்துக்கு பேக் மாதிரிப் போட்டுக் கழுவினால், நிறம் கூடும். கரட் சாற்றுடன், தேன் கலந்து முகத்தில் போட்டாலும் வெள்ளை நிறமாக வரும்.
உருளைக் கிழங்கு: இதன் சாறு எடுத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தடவி வந்தால் அவை மறையும். அதைவிட கண் கருவளையும் மறையும். உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்து அத்துடன் இரண்டு கரண்டி பால், நான்கு துளிகள் தேன் கலந்து முகத்தில் தடவினாலும் நிறம் கூடும்.
கொத்தமல்லி: தினம் இரவில் இதைக் கொஞ்சம் கசக்கி, அந்தச் சாற்றை உதடுகளில் தடவி வர, லிப்ஸ்டிக் போடாமலேயே உங்கள் உதடுகள் சிவப்பாகும்.
கீரை: கீரையின் சாறெடுத்து அத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவிப் பாருங்கள் முகம் பளிச்சென்றாகும்.
பப்பாளி: நன்கு கலந்த பப்பாளிப் பழக்கூழுடன் சிறியளவு தேன், கொஞ்சம் பால் கலந்து கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் தடவி, அரை மணித்தியாலஙட்களின் பின்னர் கழுவலாம். வாரம் இரண்டு முறைகள் இப்படிச் செய்து வந்தால், உங்கள் முகம் நல்ல நிறமாகும்.
தக்காளி: தக்காளிப் பழத்தை மசித்து, அதை அப்படியே முகம், கழுத்து, கை, கால்களில் தடவி சிறிது நேரம் ஊறிக் கழுவிட, சருமத்தில் தென்படும் கரும்புள்ளிகள், வடுக்கள் மறைந்து சருமம் சுத்தமாகும்

No comments:

Post a Comment