சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மந்தைவெளியில் அவரது இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த மாதம் (செப்டம்பர்) 24-ந் திகதி டி.எம்.சவுந்திரராஜனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
டி.எம்.சவுந்திரராஜனுக்கு காய்ச்சல் இருந்தது சிறுநீர்ப்பாதையிலும் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மருத்துவரின் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மருத்துவமனையிலேயே சில வாரங்கள் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து மருத்துவமனையிலேயே இருந்தார். தற்போது டி.எம். சவுந்திரராஜன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
டி.எம்.சவுந்தர்ராஜன் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அவரது மகன் பால்ராஜ் கூறினார்.
[ Friday, 14 October 2011, 02:31.01 AM GMT +05:30 ]
No comments:
Post a Comment