Saturday, October 29, 2011

120 வயதான கிழவருக்கும் 60 வயது பெண்ணிற்கும் திருமணம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இந்த திருமணமோ ஒரு விந்தையானதாக மிளிர்கிறது. அவரவர் நிலையில் அவரவர் செய்வது சரி என்று ஓர் நீதி உண்டு. இத்தகையதொரு நிகழ்வு அஸ்ஸாமில் நடந்துள்ளது.



வாக்களர் பட்டியலின்படி இவருக்கு வயது 116. ஆனால், அவர் தனக்குச் சரியான வயது 120 என்று சொல்கின்றார். இரண்டு புதல்வர்கள், நான்கு புதல்விகள், பேரன், பேத்திகள் ஆகியோரைச் சேர்த்து இவரது குடும்ப உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 122.

SALIMA KHATUN என்ற பெயருடைய முதல் மனைவி 2005-ல் இறந்து விட்டார். இறந்த பெண்ணின் கணவரும் தலைப்பில் குறிப்பிட்டவருமான 120 வாலிபருக்கு ஆறு ஆண்டுகளுக்குப்பின் மறுமணம் செய்துகொள்ளும் ஆசை ஏற்பட்டது. மணமகள் கிடைப்பது மிகவும் கடினமானதொரு செயலாகவே இருந்தது.

ஒரு வழியாக திரிபுராவின் வடக்கே உள்ள FOOLBARI கிராமத்தில் 60 வயதுடைய SAMOI BIBI என்னும் பெயருடைய மணமகள் கிடைத்தார். அவர் கணவரை இழந்தவர். வாரிசுகள் எவரும் இல்லாதவர். பின்னர் என்ன? கல்யாணம்தான்.

500 விருந்தினர்கள் முன்னிலையில், SATGHORI-ஐச் சேர்ந்த ஹாஜி அப்துல் நூர் மணமக்களிடம் திருமணத்திற்குச் சம்மதமா என்று கேட்டுச் சம்மதத்தையும் பெற்றுத் திருமணத்தை நடத்திவைக்கின்றார். அவர்கள் மொழியில் KUBOOL என்று கேட்டால் சம்மதமா என்று பொருளாம்.
29 Oct 2011

No comments:

Post a Comment