Saturday, September 17, 2011

நடிகை சோனா மானபங்கம் புகார்: எஸ்.பி.பி. சரண் மீது வழக்கு

(வீடியோ இணைப்பு)
பிரபல கவர்ச்சி நடிகை சோனா. இவர் ரஜினியுடன் குசேலன், மற்றும் கோ, பத்துக்கு பத்து, குரு என் ஆளு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கனி மொழி என்ற படத்தை தயாரிக்கவும் செய்தார். நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி. சரண் மீது நடிகை சோனா பாண்டிபஜார் போலீசில் பரபரப்பான பாலியல் புகார் அளித்துள்ளார்.


எஸ்.பி.பி. சரண் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் ஆவார். உன்னை சரண் அடைந்தேன் என்ற படத்தில் நடித்துள்ளார். சென்னை-28 ஆரண்ய காண்டம் போன்ற படங்களையும் தயாரித்து உள்ளார். சோனா போலீசில் அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா, படத்தில் நடித்த வைபவ் அவரது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். வெங்கட்பிரபு, பிரேம்ஜி, எஸ்.பி.பி. சரண் உள்பட 30 பேர் அந்த விருந்தில் பங்கேற்றனர். அங்கு மது பரிமாறப்பட்டது. எல்லோரும் மது அருந்தினர். அப்போது எஸ்.பி.பி. சரண் திடீரென என்னை மானபங்கம் செய்தார். இன்று இரவு என்னோடு இருக்கிறாயா என்று கேட்டு கட்டாயப்படுத்தினார். அவரிடம் இருந்து நான் தப்பி ஓடினேன். இந்த சம்பவம் என் மனதை காயப்படுத்தியது. எஸ்.பி.பி. சரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

பின்னர் சோனா கதறி அழுதபடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும் போது எஸ்.பி.பி. சரண் என் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்தார். பலர் முன்னிலையில் அசிங்கமாக நடந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். உன்னைப்பற்றி தெரியாதா நீ நடிகை தானே என்று அசிங்கமாக பேசினார். உன் ரேட் என்ன சொல் என்றார். நான் விலை மாது அல்ல. என்னிடம் அசிங்கமாக நடந்த எஸ்.பி.பி.சரண் சட்டையை வெங்கட் பிரபு பிடித்து இழுத்து சண்டைக்கு போனார்.

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏற்கனவே நான் தயாரித்த படம் தோல்வி அடைந்து பணக்கஷ்டத்தில் இருக்கிறேன். அதை மறைத்து எல்லோரிடமும் சிரித்து பழகினேன். எஸ்.பி.பி. சரண் மன்னிப்பு கேட்காவிட்டால் தற்கொலை செய்து கொண்டு சாவேன் என்றார்.

சோனா புகார் மீது போலீசார் பெண்கள் வன் கொடுமை சட்டம் (4), ஐ.பி.சி. (354), மானபங்க படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி கூறும் போது மது விருந்தில் பங்கேற்ற வெங்கட் பிரபு, வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட நடிகர்களிடம் நேரில் விசாரணை நடத்தப்படும். சோனாவை மானபங்கம் செய்தது உண்மை என தெரியவந்தால் எஸ்.பி.பி. சரண் கைது செய்யப்படுவார் என்றார்.

சோனா பப்ளிசிட்டி தேடுகிறார்! � சரண்!


விளம்பரத்திற்காக தன் மீது நடிகை சோனா வீண் பழி சுமத்துவதாக தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் கூறியுள்ளார்.

பிரபல கவர்ச்சி நடிகை சோனா, மங்கத்தா படத்திற்காக இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் தனக்கு பாலியல் தொல்லைகொடுத்ததாக குற்றஞ்சாட்டினார். பாண்டி பஜார் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் கொடுத்துள்ளார்.

மேலும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, பகிரங்கமாக தன்னிடம் சரண் மன்னிப்பு கேட்காவிட்டால் தீக்குளிப்பேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் எஸ்.பி.சரண் சோனா புகாருக்கு மறுப்பு கூறியுள்ளார்.

சோனா தன் மீது வீண் பழி சுமத்துவதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''விருந்து நிகழ்ச்சியில் நான் எதுவும் முறை தவறி நடக்கவில்லை. சோனாதான் பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாம் செய்கிறார். படம் தொடர்பாக மட்டுமே அவரிடம் பேசினேன்,' என்றார்.

இதனிடையே விருந்து நிகழ்ச்சியில் இத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று இயக்குனர் வெங்கட்பிரபுவும் மறுத்துள்ளார்.

வெங்கட் பிரபுவும் சரணும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
16 Sep 2011

No comments:

Post a Comment