உடல்நலக்குறைவு காரணமாக நடிகை காந்திமதி(65) இன்று காலமானார். கடந்த 6 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு வந்த அவர் இன்று சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். நடிகை காந்திமதியின் உடல் அடக்கம் இன்று மாலை நடைபெறுவதாக அவரது மகன் தீனதயாளன் தெரிவித்துள்ளார். பதினாறு வயதினிலே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை காந்திமதி. பல விதமானகேரக்டர்களில் நடித்து அசத்தியவர். கரகாட்டக்காரன், மாணிக்கம், வால்டர் வெற்றிவேல், சின்னதம்பி பெரிய தம்பி, அகல் விளக்கு, ஆணழகன், அமைதிப்படை, அம்மன் கோவில் வாசலிலே, அன்பு தோழி, அத்தைமகள் ரத்தினமே, சிதம்பர ரகசியம், மண்வாசனை, காதல் ஓவியம், கும்பக்கரை தங்கையா, முத்து, ராசைய்யா, சிம்லா ஸ்பெஷல், உயிர் உள்ளவரை உஷா, இது நம்ம பூமி, தவசி, ஐயா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். |
Friday, September 9, 2011
நடிகை காந்திமதி காலமானார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment