Wednesday, September 28, 2011

10 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த விமானப்படை வீரர் அடையாளம் காணப்பட்டார்

[ புதன்கிழமை, 28 செப்ரெம்பர் 2011, 02:41.39 PM GMT ]
மாத்தறை மாவட்டத்தில் பத்து வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த விமானப்படை வீரர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி தெலிஜ்ஜவில பாடசாலையொன்றில் சிறுமி ஒருவரை குறித்த விமானப்படை வீரர் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சந்தேக நபரை அடையாளம் காணும் அடையாள அணி வகுப்பு இன்றைய தினம் நடைபெற்றது.
சந்தேக நபரை எதிர்வரும் 12ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு மாத்தறை மேலதிக நீதவான் துலானி அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
உடுகாவே யெவுன்கம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான புத்திக நுவான் குமார என்பவரே குற்றச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment