Wednesday, August 24, 2011

பக்கத்து சீட்டில் இருந்த பெண்ணுக்கு ஆபசப்படம் காட்டியவர் கைது !

24 August, 2011
கொழும்பு கொள்ளுபிட்டிக்கு அருகில் பஸ்ஸில் பயணம் செய்த யுவதியொருவருக்கு செல்லிடத் தொலைபேசியில் ஆபாச படங்களை காண்பித்ததாக கூறப்படும் நபர் ஒருவரை செப்டெம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று முந்தினம் திங்கட்கிழமை உத்தரவிட்டார். 20௩0 வயதுக்கிடைப்பட்ட அப்பெண் கொள்ளுபிட்டி பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின்படி, அப்பெண் தனியார் பஸ் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அருகிலுள்ள ஆசனத்தில் அமர்ந்த நபர் ஒருவர், அப்பெண்ணை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்துள்ளார். முறையற்ற வகையில் அப்பெண்ணின் உடலில் கைவைத்துள்ளார்.

இதற்கு அப்பெண் ஆட்சேபம் தெரிவித்தபோது அந்நபர் தனது செல்லிடத் தொலைபேசியிலிருந்து ஆபாச வீடியோவொன்றை பெண்ணிடம் காண்பித்துள்ளார். இது தொடர்பாக பஸ் நடத்துநரிடமும் சாரதியிடமும் அப்பெண் புகார் செய்ததையடுத்து, அவர்கள் சந்தேக நபருடன் சேர்த்து பஸ்ஸை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இச்சந்தேக நபர் மாத்தறையைச் சேர்ந்த மேஸன் தொழிலாளி எனத் தெரிவிக்கப்படுகிறது. நீதவான் திருமதி லங்கா ஜயரட்ன முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சந்தேக நபரின் செல்லிட தொலைபேசியிலிருந்து 11 ஆபாச வீடியோக்களை கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பாரதூரமான குற்றமொன்றை இழைத்திருப்பதாக கூறப்படுவதை கருத்திற்கொண்ட நீதவான், சந்தேக நபரை செப்டெம்பர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment