Tuesday, July 19, 2011

"நான் சொன்னதை செய்வேன்! செய்வதை சொல்வேன்" வேலணையில் மஹிந்த தமிழில் உரை

[ திங்கட்கிழமை, 18 யூலை 2011, 02:41.39 PM GMT ]
உங்களுடைய உரிமை உங்களிடமே இருக்கின்றது. அதனை யாரும் எடுத்துவிட முடியாது. அதில் கவனமாக இருங்கள். நான் சொல்வதைத்தான் செய்வேன்! செய்வதைத்தான் சொல்வேன்! என்னை நம்புங்கள்! என யாழ்.வேலணையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேட்டுள்ளார்.
இன்றைய தினம் யாழ்.வேலணைப் பகுதியில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மக்கள் மத்தியில் தமிழ் மொழியில் உரையாற்றினார். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றும் போது. கடந்த 30வருடங்கள் மக்கள் அனுபவித்து வந்த இன்னல்களும் துயரங்களும் இனி இல்லை. யாரையும் சந்தேகப்பட வேண்டாம் யாருக்கும் பயப்பட வேண்டாம்.
யுத்தம் முடிந்து 2 வருடங்களில் நாம் வடக்கின் அபிவிருத்திக்கு பெருமளவு செலவிட்டுள்ளோம் வடக்கின் அபிவிருத்தி துரிதகதியில் நடந்து கொண்டிருக்கின்றது.
சிலர் மக்களைத் தொடர்ந்தும் தவறான வழியில் கொண்டு செல்ல நினைக்கின்றார்கள். இவர்கள் தங்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் சுகங்களையும் வெளிநாடுகளில் வைத்து விட்டு இங்கே வந்து மக்கள் பற்றிப் பேசுகிறார்கள்.
இது பற்றி மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும். என்றார்.

No comments:

Post a Comment