Thursday, July 7, 2011

பிரபல செய்மதி தொடர்பாடல் நிறுவன பொறியியலாளரை தேடி இராணுவப் புலனாய்வு பிரிவு வலை வீச்சு.

[ வியாழக்கிழமை, 07 யூலை 2011, 02:25.52 AM GMT ]
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த வருடம் கைப்பற்றப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் கணணியில் இருந்து பல தகவல்களை இராணுவக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதில் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் பலரது பெயர் விபரங்களும் மற்றும் அவர்களது தொடர்புகளையும் இராணுவத்தினர் பெற்றுள்ளதாகவும், மேலும் அந்தக் கணணியின் தொடர் இலக்கத்தை ஆராய்ந்ததில் அந்தக் கணணி கொழும்பு வெள்ளவத்தை நெல்சன் பிளேசில் வசித்த ஒருவரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டது எனவும், அவர் கொழும்பில் உள்ள ஒரு பிரபல செய்மதி தொடர்பாடல் நிறுவனத்தில் வேலை செய்தவர் எனவும், சமாதான காலப்பகுதியில் இவரே விடுதலைப் புலிகளிற்கு பெருமளவு செய்மதி தொடர்பாடல் சாதனங்களை தனது நிறுவனத்தினூடாக அனுப்பியுள்ளார் எனவும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அந்நபரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வலைவீசி தேடி வருவதாகவும், நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்று மீண்டும் அவரை தேடி உள்ளதாகவும், எனினும்  அவர் தலைமறைவாகி வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment