Sunday, July 3, 2011

நண்பனை காப்பாற்ற சென்றவர் கடல் அலையில் சிக்கி பலி

[ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 11:28.08 AM GMT ]
பொத்துவில் உகந்தமலை ஆலயத்தின் கடற் பகுதியில் நீராடச் சென்ற ஒருவர் கடல் அலையில் சிக்கி தத்தளித்த நண்பனை காப்பாற்ற சென்ற ஒருவர் கடல் அலையில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் தத்தளித்த நண்பன் காப்பாற்றப்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது.
இத் தகவலை பொத்துவில் பொலிஸார் நிலைய பொறுப்பதிகாரி வசந்த குமார தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் இருந்து கதிர்காமத்திற்கு யாத்திரியாக செல்வதற்கு உகந்தமலை ஆலயத்திற்கு சென்று ஆலயத்தின் கடல் பகுதியில் சம்பவதினம் பகல் 2.30 மணியளவில் நண்பனுடன் நீராடச் சென்று கடலில் நீராடியபோது ஒருவர் கடல் அலையினால் நண்பன் சிக்குண்டு தத்தளித்த போது அவரை காப்பாற்றிய போது அக்கரைப்பற்று கோளாவில் கோபால் போடியார் வீதிலைச் சேர்ந்த கிருஷ்னமூர்த்தி சுரேஷ் 25 வயது வயது இளைஞர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளதுள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பொத்துவில் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசேதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment