Wednesday, May 4, 2011

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் தலையிடாதிருக்க பிரான்ஸ் தீர்மானம்

 
[ புதன்கிழமை, 04 மே 2011, 11:51.18 AM GMT ]
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான அறிக்கை குறித்த பிரான்ஸின் நிலைப்பாடு, விரைவில் பிரான்ஸ் அரசாங்கத்திடம் இருந்து வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து கருத்து வெளியிடுமாறு இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம், நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரான்ஸ் தூதுக்குழுவின் பேச்சாளரிடம் கோரி இருந்தது.
இது தொடர்பிலான உத்தியோகபூர்வ நிலைப்பாடு பாரிஸில் இருந்து விரைவில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரான்ஸ் தூதுவர் ஜெராட் ஆரோடின் தகவல் படி, ஐக்கிய நாடுகள் சபை இலங்கையின் யுத்தம் தொடர்பில் தலையிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையின் யுத்தத்தில் 30,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு சபையில் பிரான்ஸ் தரப்பில் எடுத்துக் கூறப்பட்ட போதும், இது தொடர்பில் தலையிடாதிருக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment