Saturday, May 14, 2011

செல்வியே மக்கள்நலனில் இவ்வெற்றியை செலவிட்டால் இன்னும் பல வெற்றிகள் உமக்கே!!


மூன்றாம் முறையாக முதல்வராகும் செல்வி ஜெயலலிதாவே இரண்டுமுறை செய்த ஊழல்கள் இதுவரை உம்மை ஒதுக்கியதோடு உமது பழிவாங்கல் நடவடிக்கைகளே உம்மை பதவியகற்றின!!இம்முறையாவது உமை நம்பிய மக்களுக்கு உண்மையாய் உழைப்பதன் மூலம் இன்னும் பலதடவைகள் உமது கட்சியை ஆட்சியில் அமர்த்துக!!கலைஞர் போல சாகும் வரை ஆளும் ஆசையை அகற்றி,இளையோரை அரசியலில் ஈடுபடவும் பதவிகளில் இருக்கவும் வழி செய்க!உடல் முழுதும் வாட்டும்
நோயிருக்க,உணர்வோ செத்திருக்க பதவியாசை மட்டும் போகாத வயோதிபரால் நாம் பட்ட துயரம் போதுமே,ஓடியாடி,சிறப்பாக சேவை செய்யக்கூடிய நல்லவரே நமக்கு தேவை!!இருந்த கதிரைக்கும் பாரமாய்,எழுவதற்கு இருவர் கூட வரும் ஒருவரால் சிந்தித்து முடிவெடுக்க முடிந்தாலும் அது சிறப்பாக அமையாது செலவைத்தான் கொடுக்கும்,எனவே உங்கள் ஆட்சியாவது புதுமையும் புரட்சியுமாய் அமையுமா புரட்சித்தலைவர் தந்த புரட்சித்தலைவியே!!இல்லை பழைய குடுடி கதவை திறடிதானா!!வாழ்த்துக்கள் உங்களுக்கு தகுதியாக வாழ்த்துகிறோம்!!









No comments:

Post a Comment