Saturday, May 7, 2011

நாளை அன்னையர் தினம் அம்மா!!

பெற்று வளர்த்து சீராட்டிப்பாராட்டிய தாய்க்கு ஐரோப்பாவில் நாளொன்றை ஒதுக்கி அன்னையர் தினமாக கொண்டாடுகின்றனர்.இரவோ பகலோ பாராது உயிர்கொடுத்து வளர்த்த தாய்க்கே இந்நிலை என்றால் பொருள்தேடி புலம்பெயரும் தந்தை நிலைதான் என்னே!!அன்னையே உனக்கு நாள் ஒதுக்கும் கேவலமான ஜந்தல்ல நான்.என்னுயிரும் நீயே,உறவும் நீயே,அறிவும் நீயே தாயே!!நீயே என் வாழ்க்கை தந்த தெய்வம்,என்றுமே உன்னை நினைக்கையில் உனக்கென்று ஒரு நாள் நானும் ஒதுக்கலாமா நினைப்பதற்கு,மதிப்பதற்கு!!அது வயோதிபர் மடத்தில் தாயை விட்டுவிட்டு,விட்டதை மறப்பவற்கான நாள்!அத்தகைய நாட்கள்தான் இன்று இந்தியாவிலும் அதிகமாக விரும்பி கொண்டாடப்படும் நாட்கள்!!நம்நாட்டிற்கும் அது தேவைதானா??





No comments:

Post a Comment