Wednesday, April 27, 2011

மரண அறிவித்தல்

மண்ணில்31-7-1967                                விண்ணில்-23-4-2011
                                     Sutharman Navarathnam


பள்ளித் தோழனாய் பழகிய நாட்கள்தான் எத்தனை!! அன்று தாய் மண்ணை விட்டுத்தான் போனாய் நமைஎல்லாம் மறந்து,இன்றோ புவிமண்ணையுமா விட்டுப்போனாய் எல்லோரையும் மறந்து!!தாவடி பெற்ற தவப்புதல்வரெல்லாம் தாவடியை மட்டுமல்ல தாய் மண்ணையுமே விட்டு பொன்னும் பொருளும் தேட புலம் பெயர்கையில் நீயும் நட்பிடம் கூட சொல்லாமல் சென்றாலும் திரும்பிவந்து நட்பு கொண்டாய்!!இன்றோ மீளாத உலகுக்கு செல்கையில் சொல்லிச்செல்கிறாயே!நம்மால் என்னய்யா செய்ய முடியும் நாமும் அவ்விடம் வருதலை தவிர!!உறவுகளே ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தே ;வேண்டாம் நாமுமதுவழியே போகுமவ்வளவும் இட்டுண்டிரும்!அவர் பெயரில் நல்லன மட்டும் புரிவதுடன் தமிழின் பண்டைக்கலாச்சாரம் காப்போம்,அதுவே அவரின் ஆத்மசாந்திக்கு நாம் காட்டும் பிரதி உபகாரம்!!
Lankasri Notice!

No comments:

Post a Comment