Wednesday, April 20, 2011

ஒரு காலத்தில் தென்னிந்திய திரைப்படங்களில் முக்கியமான ஹீரோயின் ராதா மகள் கார்த்திகா

நீச்சல் உடையில் நடிக்க தயாராகும் கார்த்திகா [ Wednesday, 20 April 2011, 10:19.36 AM GMT +05:30 ]
ரோஜா செடிக்கு பக்கத்திலேயே மற்றுமொரு ரோஜா செடி வளர்ந்திருப்பதை போல வளர்ந்திருக்கிறார் கார்த்திகா.
அம்மா ராதா ஒரு காலத்தில் தென்னிந்திய திரைப்படங்களில் முக்கியமான ஹீரோயின். மகளும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்புதானே? என் மகள் கோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

நீங்கதான் அவளுக்கு ஆதரவு கொடுக்கனும் என்று பத்திரிகையாளர்கள் முன்பு ராதா வைத்த வேண்டுகோள் வழக்கமான விடயம் அல்ல என்பது நிஜம்.

நான் நடிக்க வரும்போது எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் வந்தேன். இயக்குனர் என்னை அழைத்ததும் அப்படியே போய் கமரா முன்னாடி நின்றேன்.

ஆனால் கார்த்திகாவின் தலைமுறை அப்படியல்ல. மற்ற துறைகளில் பெண்கள் வேலை பார்ப்பது மாதிரி இதுவும் ஒரு துறை.

அதற்காக அவங்க எடுத்துக்கிற பயிற்சிகள் இந்த இந்த துறையை சுலபமாக்குகிறது என்று ராதா அறிமுகங்கள் கொடுக்க, அடுத்து பேச வந்த கார்த்திகாவிடம் தலைமுறைக்கேற்ற கூர்மை இருந்தது.

அம்மா சில படங்களில் நீச்சலுடையில் நடிச்சிருக்காங்க. நீங்க அதுக்கு தயாரா இருக்கீங்களா என்ற கேள்வி நிச்சயம் தர்மசங்கடம் கொடுக்கும் என்றுதான் நினைத்திருப்பார்கள்.

ஆனால் வெகு இயல்பாக அந்த கேள்வியை எதிர்கொண்டார் கார்த்திகா. கதைக்கு அவசியம் என்றால் நிச்சயம் செய்வேன்.

ஆனால் அதுக்கும் ஒரு எல்லை உண்டு அதை தாண்டாமல் பார்த்துக்கணும் என்றார்.

அடிப்படையில் நான் மலையாளி. ஆனால் தெலுங்கில்தான் அறிமுகம் ஆனேன். அந்த மொழி எனக்கு புதுசுங்கறதால தடுமாறினேன்.

மலையாளத்தில் நான் நடித்த படத்தில் சமஸ்கிருத மலையாளம் பேச வச்சுட்டாங்க.

கோ படத்தில் நான் பேசியிருக்கிற தமிழ் ரொம்ப சுலபமாக இருந்தது. அதனால் நான் நடிக்க விரும்பும் மொழி தமிழ்தான்.

No comments:

Post a Comment