Saturday, April 2, 2011

அருளுக்கு இன்று 52!

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
நேற்றுப் போலுள்ளது சங்கானையில் பல் புடுங்கியது,அக்கா தங்கை சண்டைகளையும் அன்புக்காதல் கதைகளையும் கேட்டது,வறுமையின் கொடுமையிலும் வெற்றியினை கண்டெடுத்து வெறுங்கையுடன் வெளிநாடேகியதும் நேற்றுத்தானே!கையில் இருகுழந்தைகளுடன் கடல்கடந்து போராடியே உயர்ந்ததனால் அருளேஸ்வரிதானோ!உற்றம் படும் கஸ்ரம் கண்டு பெண்ணவள் புகுந்தவீட்டை அடைந்தால் பிறந்தவீட்டை மறந்திடு என்போரிடையில் தூரத்து உறவுகளுக்கும் தூணாய் இருந்திட்டாள்!ஆனந்தமாய் அவளிருக்கு ஆனந்தகுமாரும் துணையானார்!!மூன்று தேவியரில் முதலாமவளிடம் பெற்ற உதவியோ பெருந்துணையானதே!!காலமகள் கைவிட்டாலும் அருணாச்சலத்தின் அன்புமகள் கைதூக்கியே விட்டாளே!சுஜந்தனும் சுஜானியும் கொடுத்திட்ட பேரர்களுடம் பேரும் புகழும் கொண்டே வாழ்கவே!!

வேவி போற்றும் மூத்த மகளே என்றும் நன்றே வாழ்க!! எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்றமகற்கு!!இது எனக்கு!!


Vaanam Vanthu song - Guru En Aalu

No comments:

Post a Comment