Friday, March 11, 2011

இரத்தினம் பஞ்சலிங்கத்தின் 11ஆண்டு நினைவுநாள் 13-03-2011

தாவடியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட கார்கார பஞ்சலிங்கத்தின்  11ம் ஆண்டு நினைவுநாள் 13-03-2011அன்றாகும், சொல்லால் செயலால் சிறந்த ஒருவரை இப்பரணி இழந்து தவிக்கின்றது,உயர்ந்த அம்மாமனிதர் சபாபதி இரத்தினத்துக்கும் ராசமணிக்கும் மூன்றாவது குழந்தையாக இரண்டாவது புதல்வனாக 07-04-1934அன்று மண்ணில் உதித்தார்,சண்டிலிப்பாயை சார்ந்த சவியர் சுப்பிரமணியம்,சின்னம்மா தம்பதிகளின் புதல்வி ராசபூபாலநாயகியை 1965 மணந்து ,ஐந்து பிள்ளைகளைப் பெற்றார்,பிள்ளைகள் செய்த பாக்கியம் அவரை தந்தையாக பெற்றது,அவர் செய்த பாவம் பிள்ளைகள் பாசமற்றவர்களானது.எனினும் இறுதிச்சடங்கில் மூன்றாவது மகன் கொள்ளிபோட்டு புண்ணியத்தை அள்ளிக்கொண்டார்!வறுமையின் கொடுமையிலும் அனைவரையும் படிக்கவைத்து மனைவியின் விருப்பை நிறைவேற்றுவதில் பங்காற்றினார்.ஊர் போற்ற வாழ்ந்து மரணித்த அவருக்கு பிள்ளைகள் நினைக்காவிடினும் நாம் நினைவு அஞ்சலி செலுத்துகிறோம்!!

No comments:

Post a Comment