Wednesday, February 16, 2011

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடைக்கு எதிராக வழக்கு


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடைக்கு எதிராக வழக்கு
[ புதன்கிழமை, 16 பெப்ரவரி 2011, 06:19.56 AM GMT ]
ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கிக் கொள்ளக் கோரி மிக விரைவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
நெதர்லாந்து பிரபல வழக்கறிஞர் விக்டர் கோப் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். அதற்கு ஆதாரமாக அவர் ஏராளம் வாதங்களை முன் வைக்கவும் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் சம உரிமை கொண்டவர்கள் என்ற நிலையில், ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேசப் பிரகடனங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் தமிழ்  மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்கள் என்ற ரீதியில் அந்த இயக்கத்தின் மீது தடை விதிக்க முடியாது என்பது அவர் முன் வைக்கும் பிரதான வாதமாகும்.
அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய எடுத்துள்ள தீர்மானம் தவறானது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து, தடையை நீக்கிக் கொள்ள  வைப்பது விக்டர் ஹோப்பின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment