Wednesday, December 1, 2010

புதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

from tamil CNN
கேள்வி
 வணக்கம் சார், நான் திருமணம் முடித்து 3மாதங்களாகிறது.கடந்த .. மாதமும் ஆணுறைகளை பாவித்தோம். இப்போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நானும் எனது கணவரும் எண்ணியுள்ளோம்.நாங்கள் சுகமான கர்ப்பம் ஒன்றைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
 பதில்
 நல்லது சகோதரி ,உங்களுக்கு மட்டுமல்லாது எல்லோருக்கும் பொதுவாக கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்திருக்கும் பெண்கள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றேன். கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்திருக்கும் பெண்கள் செய்ய /கடைப்பிடிக்க வேண்டியவை!

1.இயற்கையான எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம்.

2.செயற்கையான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது (சோடா போன்றவை)

3.பழுத்த அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை

4.போலிக் அசிட் எனப்படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்குவது நல்லது

5.பரசிட்டமோல் மாத்திரை விழுங்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது

6.வேறு எந்த மாத்திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்

7.எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கு (குறிப்பாக எக்ஸ் -ரே ) முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்.

8.இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

9.உங்களுக்கு நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, பிரசர் போன்ற நோய்கள் இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

10.மேலே சொன்ன நோய்களுக்கு மாத்திரைகள் பாவிக்கும் நபர் என்றால் கர்ப்பம் தரிக்கும் முன்னமே வைத்தியரிடம் கூறி கர்ப்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

11.கர்ப்பம் தரித்தவுடன் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை நிலையத்தில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பதிவு செய்து கொள்ளவும்.

No comments:

Post a Comment