இளம் கன்று பயமறியாது என்பதற்கேற்ப நானும் என் அப்பா,அம்மாவை மதியாமல்,நண்பர்களுடன் கூத்தடித்தேன்,படிப்பை நிறுத்தி,விடுதலைக்கு போராட சென்றேன்.அப்பாவின் சொத்தை அழித்து,அம்மாவின் கண்ணீரை பெருக்கெடுக்கச்செய்தேன்.எனினும் இந்தியராணுவமுகாமிலும்,இன்னும் பல இடங்களிலும் என்னை மீட்ட அந்த அன்பு தெய்வங்களுக்கு நான் கொடுத்தது துயரம் ஒன்றுதான்.இன்றுவரை என்னால் எனது குடும்பத்துக்கு நன்மைகளை மனதில் மட்டுந்தான் செய்ய முடிந்ததே அன்றி உண்மையில் செய்ய முடியவில்லை,இத்தனைக்கும் நான் பதினெட்டு வருடங்களாக ஐரோப்பில் வாழ்கின்றேன்.இன்றுவரை நான் விரும்பிய எதையும் முயற்சியின் பின்னும் அடைய முடிந்ததில்லை,கிடைக்க வேண்டியவை கூட கைக்கு வந்து வாய்க்கெட்டாமல் போய் விட்டன!!என் கவலை ஒன்று மட்டுமே,அது என்னை பெற்றவரின் மனங்களை குளிரவைக்க என்னால் இன்றுவரை முடியவில்லை!!
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"
No comments:
Post a Comment